ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய புதிய திட்டங்களை மக்களுக்கு கொடுத்துவருகிறார் என மக்கள் பாராட்டி வருகின்றனர். அதிரடியாக பல நடவடிக்கைகள், வீடு தேடி ரேஷன் பொருட்கள், அரசு பள்ளிகளில் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியுடன் ஒப்பந்தம், நவீன ஆங்கில பாடம் என இந்தியாவில், அடுத்த 10,15 வருடங்களுக்கு பின் வரப் போகும் சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுக்கும் மாநிலமாக ஆந்திரா மிளிர்கிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு மாவட்டத்துக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திர பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 'கோனசீமா' என்ற மாவட்டத்துக்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டும் அறிவிப்பை கடந்த மே மாதம் மாநில அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து அந்த பகுதி மக்கள் சட்டமன்ற அமைச்சர்கள் வீட்டிற்கு தீ வைத்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இத்தனைக்கு நாடுமுழுவது கடும் எதிர்ப்பு கிளப்பியது.
இந்நிலையில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்ற பெயர் மாற்றத்துக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அனைவரும் பாராட்டி வருகிறனற்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…