திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் சாதாரண பக்தர்கள் விஐபி பக்தர்கள் என யாராக இருந்தாலும் தங்களது திருப்பதி பயணத்தை மாற்றி அமைத்து கொள்ளுங்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது, மேலும் வரிசையானது 7 கிலோமீட்டர் நீளம் வரை நீண்டு உள்ளது. இலவச தரிசனம் செய்ய வருவோர் வரிசையில் சுமார் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் விஐபி பக்தர்கள் மற்றும் சாதாரண தரிசனம் செய்யவரும் பக்தர்கள் தங்களது வருகையை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் அறையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் தங்குவதற்கூட இடமில்லை என கூறியுள்ளனர். எனவே பக்தர்கள் வேறு ஒரு நாள் வருவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…