ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நாளை (ஜூலை 20) சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நாளை (ஜூலை 20) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார். அப்போது, காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், ஒருவேளை மேகதாது அணை குறித்து விவாதிக்கப்பட்டால், காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…