இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுகளோ இல்லாமால் செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த இந்த-விட்ரோ கருத்தரித்தல் அதாவது IVF நம்பிக்கையாக வந்துள்ளது. இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு தயாரிக்கப்படுகிறது. இப்போது தொழில்நுட்பம் இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது. இதில், கருவைத் தயாரிக்க விந்தணுவோ கரு முட்டையோ கூட தேவையில்லை.
செயற்கை கருவின் இந்த புதிய தொழில் நுட்பம் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் உலகில் முதல் செயற்கை கரு இஸ்ரேலின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விந்தணு மற்றும் கருமுட்டை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கரு முற்றிலும் சாதகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது வரும் காலங்களில் ஸ்டெம் செல்கள் உதவியுடன் மாற்று உறுப்புகள் உருவாக்குவதிலும், கரு தரிப்பு முறைகளிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…