ஸ்பெயினில் 30 வயது பெண் ஒருவர், தனது தாயை மிரட்டி 50,000 டாலர்கள் பணம் பறிப்பதற்காக தன்னை கடத்தியுள்ளதாக நாடகமாடி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போலி கடத்தலுக்கு அந்த பெண்ணின் காதலனும் அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
அந்த பெண் தனது கண்ணை மூடிக்கொண்டு இரத்தம் சிந்தியபடியான ஒரு போலி வீடியோவை எடுத்து தனது தாய்க்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில், கடத்தல்காரர்கள் பற்றி காவல்துறைக்கு சொன்னால் கொன்றுவிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
அந்த பெண்ணின் தாய் இதை எப்படியோ போலீஸிடம் தெரிவிக்க, அவர்களும் வலைப்போட்டு தேடி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் இருந்து அந்த பெண்ணையும் மற்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். இந்த பெண் இதற்கு முன்பே மூன்று முறை தனது தாயிடம் இருந்து சுமார் $45,000 மிரட்டி பணம் பறித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…