சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் பிரகாஷ். மென்பொருள் ஊழியரான இவருக்கு மனைவி காயத்ரி, மகள் நித்யஸ்ரீ, மகன் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது. அடிக்கடி இருவரும் சண்டை போடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று காலை முதல் இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், சென்று கதவை தட்டி பார்த்துள்ளனர். எந்தவித பதிலும் இல்லாததால் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த காவல்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பிரகாஷ், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மரம் அறுக்கும் ரம்பித்தாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் பிரகாஷின் வீட்டில் சோதனை செய்ததில் ரூபாய் 3.50 லட்சம் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த மே 19- ஆம் தேதி அன்று ஆன்லைனில் இந்த மரம் அறுக்கும் ரம்பத்தை பிரகாஷ் வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…