உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல கலாச்சாரத்தையும் அழித்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன்; ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார். இது உக்ரைனின் கலாச்சாரத்தையே அழிக்கும் ஆபத்தை குறிக்கிறது என கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது; உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய படைகள், தான் முற்றுகையிட்டு பின்வாங்கிய நகரங்களில் எல்லாம் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துவிட்டு வந்துள்ளன. இந்த கண்ணிவெடிகளை அகற்ற சுமார் 5 ஆண்டுகள் வரை ஆகும். குறிப்பாக வனப்பகுதிகள், தேசிய பூங்காக்களில் அதிகம் கண்ணிவெடிகள் இருப்பதால் அவை மூடப்பட்டுள்ளதாக அதிகார்டிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…