US Trending News : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப்பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில், 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை பலியாகினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் மூடல்
இந்நிலையில், கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி அருகே ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளும் உடனடியாக மூடப்பட்டன.
துப்பாக்கி சூடு
இந்நிலையில், தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். பின்னர் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…