காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ தளத்தின் மீது இரண்டு பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலைத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதோடு, மூன்று ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர்.
முன்னதாக புட்காமில் நடந்த ஒரு மணி நேர என்கவுண்டருக்குப் பிறகு மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் வீழ்த்தப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ராகுல் பட் மற்றும் அம்ரீன் பட் ஆகியோரின் கொலையில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த தற்கொலை தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…