தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தன்கர் இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட மார்கரெட் ஆல்வாவை அவர் தோற்கடித்தார்.
மொத்தமுள்ள 780 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 725 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். மொத்தம் 93 சதவீத வாக்குகள் பதிவானது. 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தவில்லை.
இதில் தன்கர் 528 வாக்குகளும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றனர். 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் 23 எம்.பி.க்கள் உட்பட 39 எம்.பி.க்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ், இந்த தேர்தலிலை புறக்கணிப்பதாக முன்னமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…