சென்னையில் நடைபெற்ரு வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்து 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உக்ரைன் போர் காரணமாக , தமிழகத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியானது டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…