தமிழ்நாட்டில் கடந்த ஜுலை 28-ந் தேதி துவங்கி இன்றுவரை 12 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.
இந்நிலையில், நிறைவு விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து, லேசர் விளக்குகள் ஒளிவெள்ளத்தில் நிறைவு விழா கொண்டாட்டம் துவங்கியது. இந்த விழாவில் தமிழ்நாட்டில் விளையாட்டின் பரிமாண வளர்ச்சி குறித்த நடன நிகழ்ச்சி நடந்தது. அதன்படி, சக்கரம் சுழற்றுதல் ஜல்லிக்கட்டு, கபடி, கண்ணாமூச்சி, பொய்க்கால் குதிரை, செஸ் ஆகிய விளையாட்டுகளை நடன வடிவில் கலைஞர்கள் தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.
மேலும், இந்த நிறைவு விழாவில் கலந்துகொண்ட சர்வதேச வீரர்கள் லேசர் விளக்கு வெள்ளத்தில் இதை பார்த்து வியந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…