ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 6 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் சகினா பேகம், அவரது இரண்டு மகள்கள் நசீமா அக்தர் மற்றும் ரூபினா பானோ, மகன் ஜாபர் சலீம் மற்றும் இரண்டு உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது என அடையாளம் காணப்பட்டனர்.
சித்ரா பகுதியில் உள்ள குடும்பத்தினரின் வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்தனர்.
அவர்கள் எதனால் இறந்தனர் என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…