காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நியமனம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்தப்பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் பிரச்சாரக் குழு புதிதாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…