Jewelry loan discount : தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்குள் கடன் பெற்ற மக்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில்அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடனை முற்றிலும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சியமைத்த உடன் நடத்திய விசாரணையில் இந்த நகைக்கடன் பெற்றவர்களில் பலர் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற தகுதியுள்ள பயனாளர்களின் கடன் தொகை 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த நகைக்கடன் தள்ளுபடி மூலம் 14.40 லட்சம் பயனாளர்கள் பயன்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…