அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை 1894ம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர், சார்பு அமைப்புகள் சார்பில் 38,000 வழக்குகள் தொடர்ந்தன.
இதனையடுத்து அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பவுடர் தேவை வீழ்ச்சியடைந்து விற்பனையை நிறுத்தியது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் டால்கம் பவுடரின் பாதுகாப்பு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. டால்க் அடிப்படையிலான ஜான்சன் பேபி பவுடர் பாதுகாப்பானது. அதில் ஆஸ்பெடாஸ் கலக்கப்படுவதில்லை. புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை உலகம் முழுவதும் நடந்த பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் என கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…