கள்ளக்குறிச்சியில் நடந்த மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், கடலூர் வெள்ளி கடற்கரையில் போராட்டம் நடத்த வாட்ஸ்அப் குழு உருவாக்கிய விஜய் என்ற கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், வாட்ஸ்அப் குழு மூலம் கடலூர் வெள்ளி கடற்கரை அனைவரும் குவிந்து போராட வேண்டும் என அம்மாணவர் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சேர்த்து தினேஷ், கார்த்திக் ஆகிய இளைஞர்களையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…