Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி கலவரம்... மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்...

Muthu Kumar July 19, 2022 & 13:21 [IST]
கள்ளக்குறிச்சி கலவரம்... மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்...Representative Image.

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் அடைந்த நிலையில் அங்கு போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் டிசிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரத்தின் காரணமாக பள்ளி சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் புதிய சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்