கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது.
இந்நிலையில், இப்போராட்டம் மற்றும் வன்முறையை உளவுத்துறை கணிக்க தவறியது என்றும் இது உளவுத்துறையின் தோல்வி என பல பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளதாகதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கலவரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை தெரிவித்தாலும் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…