கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி முன்பே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் இணைந்து மாணவர் அமைப்பினர் இநலைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் போராட்டத்தை கலவரமாக மாற்றி பள்ளியில் இருந்த பேருந்துகள் மற்ற வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் என அனைத்தையும் தீக்கிரையாக்கினார். மேலும்பள்ளி மீது தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை உண்டாக்கினார். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.
இதனைக்கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்த நிலையில், விதிகளை மீறி விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்ச அன்பில் மகேஷ் பொய்யாமொழி வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட பள்ளி சீரமைக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும் என்பதால் அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் அருகில் உள்ள வேறு பள்ளியில் படிக்கச் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…