Politic News : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், “அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுத்தது.
இதனையடுத்து, இந்த முறைகேட்டில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் இன்னும் அரசு எடுக்கவில்லை என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்
மேலும். அதிகாரிகள் மீது வழக்கு செய்ய வேண்டும் என ஏழு மாதங்களுக்கு முன் அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. ஆனலும், இதுவரை தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இது சந்தேகங்களை எழுப்பியுள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…