Politic News : தமிழகத்தில் உள்ள பிரபல அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை என்ற கோசம் எழுந்ர்துள்ளது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுக் குழுவைக் கூட்டுவதற்காக மாற்று இடத்தை தேடி வரும் நிலையில் ஈசிஆர் சாலையில் உள்ள கல்லூரி ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை கூறிய போது, “அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கல்லூரிகளில் நடத்த உயர்கல்வித்துறையின் அனுமதி கிடைக்காது” என தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளி கல்லூரிகளில் சாதி மத இயக்க செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனால், அதிமுக பொதுக் குழுவைக் கூட்டுவதற்காக வேறு இடத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…