தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காமராஜர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காமராஜர் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை” என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…