கார்த்திக் சிதம்பரம் விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகனும், மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் விசா முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், கார்த்திக் சிதம்பரம் விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, விசா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனு விசாரணை செய்யப்படும் வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உறுதி அளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…