Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒடிசா ரயில் விபத்து விவகாரம் - தென்கிழக்கு ரயில்வே பொதுமேலாளர் பணிநீக்கம்

Saraswathi Updated:
ஒடிசா ரயில் விபத்து விவகாரம் - தென்கிழக்கு ரயில்வே பொதுமேலாளர் பணிநீக்கம் Representative Image.

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்து விவகாரத்தில் தென்கிழக்கு ரயில்வேயின் பொதுமேலாளர் அர்ச்சனா ஜோஷி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நோக்கிச் சென்ற ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 291 பயணிகள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தியாவை மட்டும் உலகையே உலுக்கிய இந்த பயங்கர விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்கிழக்கு ரயில்வேயின் பொதுமேலாளர் பதவியிலிருந்து அர்ச்சனா ஜோஷி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

ரயில் விபத்து நடந்து நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அர்ச்சனா ஜோஷி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. அவருக்குப் பதிலாக தென்னக ரயில்வே புதிய பொதுமேலாளராக அனில்குமார் மிஸ்ரா நியமிக்கப்படுகிறார். இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனக்குழு அளித்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்