எம்.ஜி.ஆர். மறைவின்போது நடந்த கலவரத்தில் சென்னை அண்ணாசாலையில் இருந்த கலைஞரின் சிலை அவரது ஆதரவாளர்களால் தகர்க்கப்பட்டது. தற்போது அதே சாலையில் 35 ஆண்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து சிலை திறப்பு விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…