உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 220 மில்லியனாக உயரும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இன்று உலகம் முழுவதும் பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால், உணவு சங்கிலி தடை பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 220 மில்லியனாக உயர வாய்ப்புள்ளதாக ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரி மௌரிஸோ தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், 2021ல் 53 நாடுகளில் பசியால் வாடிய மக்களின் எண்ணிக்கை 200 மில்லியன். ரஷ்ய - உக்ரைன் போரால் இதன் எண்ணிக்கை மேலும் 18 மில்லியன் அதிகரிக்கும் என்றார்.
இதனையடுத்து உக்ரேனிய துறைமுகங்களில் ஆறு மில்லியன் டன் தானியங்களும் கிட்டத்தட்ட 14 மில்லியன் டன் சோளமும் ரஷ்ய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இத்தாலிய விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…