கேரளாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது இன்று வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையன்னூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து பையனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே வெடிகுண்டு தாக்குதலில் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக சனிக்கிழமை, கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், முன்னாள் அமைச்சர் சஜி செரியன் கூறிய அரசியல் சாசனத்திற்கு எதிரான கருத்துக்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்எஸ் கோல்வால்கர் எழுதிய புத்தகத்தில் இருந்து வந்தவை என்று ஏற்கனவே தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், இதற்காக எந்த சட்டரீதியான விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையில், மத அடிப்படைவாதிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக சதீசன் ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்க்கிறார் என்று பாஜக அவரை விமர்சித்தது.
இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…