Tamilnadu News Live : சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் குளிர்ச்சியாக காணப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. இதனால் சென்னை நகர் முழுவதும் குளிர்ச்சியாக உள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்துள்ளதால் சென்னை முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவரும் நிம்மதியடைந்தனர்.
மேலும், பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் இனி படிப்படியாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான தற்போது நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…