Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. மீண்டும் இந்திய எல்லையோரம் பரந்த சீன விமானங்கள்!!

Sekar July 24, 2022 & 19:57 [IST]
பரபரப்பு.. மீண்டும் இந்திய எல்லையோரம் பரந்த சீன விமானங்கள்!!Representative Image.

இந்தியா மற்றும் சீன நாடுகளின் தளபதிகளுக்கு இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னரும், சீனப் போர் விமானங்கள் மீண்டும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் பறந்து, பதற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் சீன ராணுவம் செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் சீனாவின் வான்வெளி அத்துமீறலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் இந்திய விமானப்படை, நிலைமையை மிகவும் பொறுப்புடன் எதிர்கொள்கிறது. கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் சீன விமானங்கள் எல்லைக்கு மிக அருகில் பறந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

பல வல்லுனர்கள் சீன விமானங்களின் அதிகரிப்பு இந்திய பாதுகாப்பு நடைமுறையை ஆராயும் முயற்சியாக பார்க்கின்றனர்.

இதற்கிடையே இந்த ஆத்திரமூட்டல்களுக்கு வலுவான பதிலடியாக, இந்திய விமானப்படையானது அதன் மிக சக்திவாய்ந்த போர் விமானங்களான மிக்-29 மற்றும் மிராஜ் 2000 போன்றவற்றை சில நிமிடங்களில் சீன நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய மேம்பட்ட தளங்களுக்கு மாற்றியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்