ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் பகுதி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை மூன்றரை மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல் நிலையத்தின் கதவு, ஜன்னல்கள், நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
அப்போது காவல் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்ட இரண்டு காவல் அதிகாரிகள் மட்டுமே அங்கே இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்து நடந்ததால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. எதனால் இந்த வெடி விபத்து நடந்திருக்கும் என்று சோதனை செய்யும் போது கிடைத்த தகவல் இதுவே. 2018 ஆம் ஆண்டில் இந்த காவல் நிலையத்தில் 713 கிலோ ஓப்பியம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானவை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வெறும் 250 கிராம் மட்டும் சோதனைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தான் இந்த வெடி விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் இதனால் சம்பவ இடத்தில் பெரிய குழி ஒன்று உருவாகியுள்ளது. இருப்பினும் அங்கு அனைவருக்கும் ஆயிசு கெட்டி, எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…