சாலை விபத்தில் கணவர் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு பிறகு மனைவிம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், தன்னுடைய 10 வயது குழந்தை பார்த்துக்கொள்ளுமாறு, தாயை வலியுறுத்தியுள்ளார். தகவலையடுத்து வந்த காவல்துறையினர், நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில், சிஆர்பிசியின் 174வது பிரிவின் கீழ் விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…