இந்தியாவில் ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 3 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வருடம் நாளை (ஜூலை 31) கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்து ஜூலை 31ம் தேதிக்குள் வரியை கட்ட முடியாது. மேலும், கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் #Extend_Due_Date_Immediately #ExtendDueDate போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானது. மேலும், இந்த ஹேஷ்டேக்குடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தை டேக் செய்திருந்தனர்.
இதனையடுத்து, இந்த ஹேஷ்டேக்குகளை கண்டு கொள்ளாத மத்திய அரசு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு கிடையாது என தெரிவித்திருக்கிறது.
மேலும், நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். 5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…