கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல கட்டுபாடுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பப்புள்ளியான சீனாவில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னைக்கும் மட்டும் 410 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இந்த பெருந்தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்ததால், அந்நாட்டின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, பெய்ஜிங்கிலும் பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…