சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனாவின் புதிய வகை வேகமாக பரவி வருகிறது. இதனால் புதிய வகை கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சார்ஜாவில் இருத்து ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த நபர்களுக்கு ரேன்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது.
அதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு கொரோனா இருந்தது உறுதியானது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…