கொடிய விஷ பாம்பு ஒன்று, கோபத்துடன் சிறுவனை சீண்ட வந்த நிலையில், சிறுவனின் தாய் துணிச்சலாக சிறுவனை மீட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. என்னதான் பாம்பின் மீது பலருக்கு அலாதி பிரியம் இருந்தாலும், எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், திடீரென பாம்பு அருகில் வந்துவிட்டால் பதறித்தான் போவார்கள்.
இந்நிலையில் தாயார் ஒருவர் துணிச்சலுடன் பாம்பிடமிருந்து சிறுவனை மீட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், வீட்டு வாசதில் சுமார் 6 அடி நீள விஷமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து போகிறது, இதை அறியாமல் சிறுவன் ஒருவன் அதன் அருகில் செல்ல, பாம்பு கடுங்கோபத்துடன் குழந்தையிடம் சீறி வந்தது.
அப்போது, மின்னல் வேகத்தில் துரிதமாக செயல்பட்ட குழந்தையின் தாய், பாம்பிடம் இருந்து சிறுவனை காப்பாற்றுகிறார். இந்த வீடியோ சிசிடிவி காட்சி எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றபோதிலும், பாம்பிடமிருந்து துணிச்சலாக சிறுவனை மீட்ட பெண்மணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிறுவனை தாக்க வரும் பாம்பு என பலரும் இந்த வீடியோவை பார்த்து கூறினாலும், உண்மையில் சிறுவன் அறியாமல் பாம்பை மிதிக்கும் நேரத்தில் சுதாரித்து பாம்பு விலகுவதும், பின்னர் அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வதும் போல் தான் அந்த வீடியோவில் தெரிகிறது என்றும், பாம்பு சிறுவனை தாக்க முற்படவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவ பார்த்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்டில் சொல்லுங்க.
வீட்டு வாசலில் இருந்த கொடிய விஷ பாம்பை கவனிக்காமல் அதன் அருகில் சென்ற சிறுவனை தீண்ட வந்த பாம்பிடம் இருந்து அவரது தாயார் மீட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.#viralvideo #snake #TamilNews pic.twitter.com/B3Dwmaxpsr
— M.Govindaraji (@RJGovind104) August 13, 2022
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…