Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள இடதுசாரிகள்..!

madhankumar May 18, 2022 & 10:49 [IST]
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள இடதுசாரிகள்..!Representative Image.

பிரதமர் நரேந்திர மோடி அரசானது மக்களுக்கு எதிரான விரோத போக்கை கடைபிடித்துவருகிறது. இதனை கண்டித்து வரும் 25ம் தேதி முதல் ஒரு வாரம் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்த்துவதை கட்டுப்படுத்திடவும், வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின்மீதான வரிகளை கைவிட்டு விலை உயர்வை மொத்தமாக திரும்பப்பெற வேண்டும் -  பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ எம். எல்.லிபரேசன் ஆகிய கட்சிகள் சார்பில் வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் மத்திய, நகர, வட்ட தலைநகரங்கில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும்,  வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்