Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வடிவேலு காமெடி பாணியில்.. நூதன முயற்சி.. கடைசியில் சிக்கியது எப்படி.. வைரலாகும் வீடியோ!!

Sekar September 04, 2022 & 15:42 [IST]
வடிவேலு காமெடி பாணியில்.. நூதன முயற்சி.. கடைசியில் சிக்கியது எப்படி.. வைரலாகும் வீடியோ!!Representative Image.

ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா எனும் காமெடியில் நடிகர் வடிவேலு டாஸ்மாக்கில் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிடுவதை போல, திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் கொள்ளையடிக்க முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வாடிக்கையாளரை போல வந்து மது கடைக்குள் புகுந்து, யாருக்கும் தெரியாமல் உள்ளேயே இருந்து நள்ளிரவில் கடை உரிமையாளருக்கு போன் போட்டு, ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா? கடையை எப்போசார் திறப்பீங்க? என கேட்டு உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடுவார்.

மேலும், கடைக்குள் இருக்கும் மதுவை குடித்துவிட்டு கல்லாவில் இருந்த பணத்தையும் திருடிக்கொண்டு சென்றுவிடுவார். இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்த நிலையில், கொள்ளையர்கள் மதுபோதையில் தப்பிக்க முடியாமல் போலீசிடம் மாற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்டலச்சேரி டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். pic.twitter.com/xqNd3FQ3wL

— Kᴀʙᴇᴇʀ - தக்கலை ஆட்டோ கபீர் (@Autokabeer) September 4, 2022

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடையின் சுவற்றில் நேற்று நள்ளிரவில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த இரண்டு பேர் விடிய விடிய மது குடித்துள்ளனர்.

டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு உள்ளே சென்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சுவர் ஓட்டை அருகே நின்று வெளியே வரும்படி தொடர்ந்து கூறி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் "சரி போவோம்" என அந்த சிறிய ஓட்டை வழியே பாம்பை போல நெளிந்துகொண்டு போதையில் தள்ளாடியபடி இரண்டு பேரும் வெளியே வந்தனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர். டாஸ்மாக் கடை சுவற்றில் இரண்டு பேர் ஓட்டையை போட்டு ஆட்டைய போட முயன்று போலீசிடம் அகப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்