பட்டியலின மாணவர்களின் சேர்க்கை 18%க்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்துதாஸ் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் பட்டியலின மாணவர்களின் சேர்க்கை விகிதம் பொது கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகள் உட்பட்ட 13,000 பள்ளிகளில் பட்டியலின மாணவர்களின் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம் பள்ளிகளில் 50 %-க்கு மேலுள்ளனர். ஆயினும் வேறு 10,000 பள்ளிகளில் பட்டியலின மாணவர்களின் சேர்க்கை 18%-க்குக் கீழாகவே உள்ளது. 1000 பள்ளிகளில் இது 55 ஆக உள்ளது மேலும் 100 பள்ளிகளில் 0% ஆக உள்ளது, இது குறித்த புள்ளிவிவரங்களை 2005 முதல் அதிகாரிகளுக்கு அனுப்பியும் ஆய்வுகள் ஏதும் மேற்கொண்டனரா என்ற தகவல் இல்லை.
இந்நிலையில் 18%க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் இதுகுறித்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…