Maharashtra News Live : மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருந்து வருகிறார்.
இந்நிலையில், சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு 40 எம்.எல்.ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றதால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது.
மேலும், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 30 வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதித்து தானே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…