நவம்பர் 20 ஆம் நாளான நேற்று புனே – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து காரணமாக 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாவலே பாலத்தில் உள்ள சரிவினால் லாரியில் பிரேக் செயலிழந்தோ அல்லது கட்டுப்பாட்டை இழந்தோ விபத்து ஏற்பட்டிருக்கும் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
அங்கு உள்ள பாலத்தின் சரிவில் இருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து அதன் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து உண்டானது. இதனால், சாலையில் வாகனங்களில் இருந்து எரிபொருள் சிந்தியதால், பிற வாகனங்கள் வழுக்கி ஒன்றன் மீது ஒன்றாக விபத்துக்குள்ளாகி 48 வாகனங்கள் சேதமடைந்தது. இதில் பல்வேறு நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…