Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கழன்று ஓடிய ரயில் பெட்டி.. நள்ளிரவில் சேரன் எக்ஸ்ப்ரஸில் விபரீதம்!!

Sekar November 06, 2022 & 12:47 [IST]
கழன்று ஓடிய ரயில் பெட்டி.. நள்ளிரவில் சேரன் எக்ஸ்ப்ரஸில் விபரீதம்!!Representative Image.

நள்ளிரவில் சேரன் விரைவு ரயில் பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து கோவைக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், அதில் முக்கியமான ரயிலாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. இந்த ரயிலில் இரவில் சென்னையில் பயணத்தை தொடங்கினால் அதிகாலையில் கோவைக்கு சென்று விடலாம் என்பது தான் இந்த ரயிலில் பயணிக்க மக்கள் முன்னுரிமை கொடுக்க காரணம். 

இந்நிலையில், நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரை கடந்து சென்றபோது, திடீரென பயங்க சத்தத்துடன்  ரயிலின் பெட்டிகள் திடீரென துண்டிக்கப்பட்டு தனியாக சென்றுள்ளது. 

அப்போது ரயிலில் உள்ள  S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளின் இடையே இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை உணராமல் ரயில் என்ஜின் மற்ற பெட்டிகளோடு சிறிது தூரம் பயணித்துள்ளது. 
 இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். 

எனினும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு பெட்டிகள் இல்லாததை கவனித்த ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார். இதன் காரணமாக பெரிய விபத்து நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயில் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. 

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தால் பயணிகள் சிறிது நேரம் பீதியடைந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்