மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் தீயணைப்பு சேவை துறை தெரிவித்துள்ளது.
மாலத்தீவின் மாலேயில் இந்திய பிரஜைகள் உட்பட உயிரிழப்புகளை ஏற்படுத்திய சோகமான தீ விபத்து குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் உள்ள இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், "மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்திய நாட்டவர்கள் உட்பட பலரின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். மாலத்தீவு அதிகாரிகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
மேலும் அங்கு பாதிப்பிற்குள்ளானனவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கான ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டுள்ளனர், அதன்படி உதவி தேவைப்படுபவர்கள் +9607361452 ; +9607790701 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…