வேலூர்: காட்பாடியில் மாமன்னன் திரைப்படம் வெளியான நிலையில், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறப்பு பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் டீட்டா சரவணன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் கலந்து கொண்டு, காட்பாடி ஆஸ்கார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி காட்பாடி ஓடை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர் ஓடை பிள்ளையார் கோவிலில் இருந்து மேல தாளங்கள் முழங்க பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் சுழற்றியவாறு ஆஸ்கார் திரையரங்கிற்கு ஊர்வலமாக வந்தடைந்தனர் பின்னர் அங்கு பெண்களுக்கு புடவைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திரைப்படத்தை காண வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வேலூர் மாநகராட்சி துணை சுனில் குமார் வழங்கினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…