மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் 61 வயதான மினுசேத் விலங்குகள் நல ஆர்வலரும் , மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் உறுப்பினருமாக இருந்துவருகிறார். இவர் தான் வசித்து வரும் பகுதியில் இருக்கும் நாய்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார். அப்படி அவர் உணவு அளிக்கும் போது, கடந்த 29 ஆம் தேதி மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் தலைவர் விஜய் மோஹான்னியிடம் இருந்து ஒரு வீடியோ வந்தது.
அந்த வீடியோவில் மும்பையில் இருக்கும் ஒரு மாலின் இரண்டாம் தளத்தில் உள்ள பால்கனியில் ஒரு இளைஞர் 6 மாத ஆன் நாயை தூக்கிக்கொண்டு பலாத்காரம் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார் மினுசேத். மும்பையில் உள்ள மாலில் பார் மற்றும் உணவு வழங்கும் கடை ஒன்று 6 மாத ஆன் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த நாயை அந்த உணவகத்தில் பணி புரியும் டெலிவரி பாய் பலத்தகாரம் செய்துள்ளார்.
அந்த நாயை இது போன்று நிறைய முறை கொடுமை படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் அது போன்ற கொடூர செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவருடன் பணியாற்றும் ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் இந்த வீடியோவை தன்னுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று நிறைய பேத்துக்கு அனுப்பியுள்ளார். அப்படி அந்த வீடியோ விஜய் மோஹான்னியிடம் வந்த பிறகு மினுசேத் உதவியுடன் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
அந்த நபரை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு இதே பகுதியில் நூரி எனும் நாய் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பிறப்புறுப்பில் ஒரு குச்சியையும் நுழைத்துவிட்டு சென்ற கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…