கன்னியாகுமரி எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ். 23 வயதான இவர் பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி வீட்டுக்கு சென்றிருக்கிறார். நண்பர் வீட்டின் வெளியில் நிற்க, ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். தொடர்ந்து நண்பருடன் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நண்பரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் கூறியுள்ளார். ஏன் என்று நண்பர் கேட்டதற்கு, காதலி வீட்டில் கசாயம், குளிர்பானம் குடித்ததாக கூறியுள்ளார்.
ஷாரோன் ராஜ் மரணம்:
ஆனால் வலி தொடர்ந்து அதிகரித்ததால் வீட்டுக்கு கூட அவரால் செல்ல முடியாமல் போனது. இதையடுத்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை ஜெயராஜன் மகனின் காதலி தான் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தார்.
பகீர் வாக்குமூலம்:
இந்த நிலையில் வழக்கு மாவட்ட க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மாவிடமும், அவரின் பெற்றோரிடமும் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அதில் நானும், ஷாரோன் ராஜும் உயிருக்கு உயிராகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்யவும் முடிவு செய்தோம். அப்போதுதான், எங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்தேன். அதை பார்த்த அவர், என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறினார். இதனால், எதிர்காலம் மீது எனக்கு பயம் ஏற்பட்டது. எனவே ஷாரோன் ராஜ் மூலமே எனது ஜாதகத்துக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்தேன். அதன்படி, கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்த நான், என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். அதன்படி, ஒரு கோயிலுக்கு சென்ற நாங்கள், மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்தோம். இது வேறு யாருக்கும் தெரியாது.
பின்னர் அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த 14-ம் தேதி ஷாரோனை எனது வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது, எங்கள் வீட்டில் இருந்த கசாயத்தை காய்ச்சி அதில் பூச்சி மருந்தை கலந்தேன். பின்னர், உன்னால் இவ்வளவு கசப்பையும் குடிக்க முடியுமா என்பது போல விளையாட்டாக பேச்சுக் கொடுத்து, இந்த கசாயத்தை குடிக்கச் செய்தேன். அவனும் சவால் என நினைத்து அதை குடித்தான். பின்னர் உடலில் விஷம் ஏறி அவன் இறந்துவிட்டான். இவ்வாறு க்ரீஷ்மா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, போலீஸார் க்ரீஷ்மாவை கைது செய்தனர்.
தற்கொலை முயற்சி:
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியைக் குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை காவல் துறையினர் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜாதகத்தை நம்பி காதலியே தனது காதலனை கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது அதே மூட நம்பிக்கையில் மேலும் ஒரு பயங்கர சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருப்பது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட கிரீஷ்மாவும், ஷாரோன் ராஜும் `ஜூஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
ஆனால் வலி தொடர்ந்து அதிகரித்ததால் வீட்டுக்கு கூட அவரால் செல்ல முடியாமல் போனது. இதையடுத்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை ஜெயராஜன் மகனின் காதலி தான் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஷாரோன் ராஜின் உடலில் விஷம் சென்றிருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் முதற்கட்டமாகத் தகவல் தெரிவித்தனர். ஷாரோன் ராஜும் கிரீஷ்மாவும் வெட்டுக்காடு சர்ச்சில் வைத்து ஏற்கெனவே ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும், தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவதாக கிரீஷ்மா அடிக்கடி கூறிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கு மாவட்ட க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மாவிடமும், அவரின் பெற்றோரிடமும் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அதில் நானும், ஷாரோன் ராஜும் உயிருக்கு உயிராகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்யவும் முடிவு செய்தோம். அப்போதுதான், எங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்தேன். அதை பார்த்த அவர், என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறினார். இதனால், எதிர்காலம் மீது எனக்கு பயம் ஏற்பட்டது. எனவே ஷாரோன் ராஜ் மூலமே எனது ஜாதகத்துக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்தேன். அதன்படி, கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்த நான், என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். அதன்படி, ஒரு கோயிலுக்கு சென்ற நாங்கள், மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்தோம். இது வேறு யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் வழக்கு மாவட்ட க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மாவிடமும், அவரின் பெற்றோரிடமும் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அதில் நானும், ஷாரோன் ராஜும் உயிருக்கு உயிராகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்யவும் முடிவு செய்தோம். அப்போதுதான், எங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்தேன். அதை பார்த்த அவர், என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறினார். இதனால், எதிர்காலம் மீது எனக்கு பயம் ஏற்பட்டது. எனவே ஷாரோன் ராஜ் மூலமே எனது ஜாதகத்துக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்தேன். அதன்படி, கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்த நான், என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…