தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் என்னை ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழக மின்சார வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 2.22 கோடி வீடுகள் பலனடைந்து வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூ.3,000 கோடிக்கு மேல் ஆண்டுக்கு மானியமாக மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த. சலுகைகளை தொடர்ந்து பெற விரும்பும் தகுதியான நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் வேண்டும் என தமிழக வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான ஆதார் எண் பெறும் வரை, வேறு ஏதேனும் ஒரு அரசு ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைவரும் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பது சட்டமாகும். எனினும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…