தென்கிழக்கு வங்கக்கடல் திசையில் நிலைக்கொண்டிருந்த மாண்டஸ் புயலானது, மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கு திசையில் 60 கிலோ மீட்டர் தொலைவில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து இந்த மாண்டஸ் புயலின் வெளிப்புறமானது கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 100 கிலோமீட்டர் தொலையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளதால், 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசி வருகிறது.
மாமல்லபுரத்திற்கு 60 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயலானது, தற்போது மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. சென்னை, காட்டுப்பாக்கம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு தரைக்காற்று வீசி வருகிறது. இதனால்
தற்போதைய நிலவரப்படி சென்னையில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசிவருகிறது. இதனால் சென்னை சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றின் வேகத்தைப் பொறுத்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
#WATCH | Heavy rains with strong winds in Pattinapakkam area of Chennai as landfall process of cyclone #Mandous begins. pic.twitter.com/tVFN7nbPYH
— ANI (@ANI) December 9, 2022
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…