Tamilnadu News Live : மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில் மாம்பழ விலையும் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடைக்காலம்
இந்தியா முழுவதும் கோடைக்காலம் என்பதால் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், இதே கோடைக்காலத்தில் விதவிதமாக தித்திக்கும் மாம்பழங்கள் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மாம்பழம்
தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றனர். மேலும், தமிழகத்தில் பல இடங்களில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் வெளிநாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மாம்பழ வகைகள்
தமிழகத்தில் விளையும் நாட்டு மாங்காயை தவிர்த்து அல்பொன்சா, மல்கோவா, பங்கணபள்ளி, செந்தூரா உள்ளிட்ட மாம்பழங்களுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் உள்ளது. இந்நிலையில், மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழ சாகுபடியும் அதிகரித்துள்ளது.
விவசாயிகள்
இந்நிலையில், தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் அதிகளவில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றன. அதில், 1 கிலோ மாம்பழம் ரகம் மற்றும் வரத்தை பொறுத்து 50 ருபாய் முதல் 130 ருபாய் வரை விற்பனை செய்து வருகிறது. மாம்பழ விளைச்சல் அதிகர்த்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…