நாட்டில் பெரும்பாலான இடங்களில் அதிக கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் எதிர்பாராத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு தொற்றுக்கள் உண்டாகி, மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மழைக்காலத்திற்கு முன்பே
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, சராசரியாக 3,000-ற்கும் அதிகமான மக்கள் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில், எந்த வகையான காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. மழைக்காலம் வருவதற்கு சிறிது காலம் இருப்பினும், தற்போது பெய்து வரும் கனமழையால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
என்ன வகை காய்ச்சல்
காய்ச்சல் என்பது பொதுவான அறிகுறியாக இருந்தாலும், பல்வேறு வகையான காய்ச்சல்கள் உள்ளன. அதாவது, டெங்கு, மலேரியா, டைபாய்டு, எலிக் காய்ச்சல், ஸ்க்ரப் டைபஸ் போன்றவை தமிழகத்தில் காணப்படக் கூடிய பொதுவான காய்ச்சல் வகைகளாகும். இந்த வகையான காய்ச்சலுடன், மேலும் கொரோனா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அதன் படி, தற்போது பெரும்பாலான இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, நிறைய இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் பெரும்பாலானோர், டெங்கு, மலேரியா, ஸ்க்ரப் டைபஸ், எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பலவகை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே, மக்கள் சாதாரண சளி இருந்தால் கூட மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…